தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்ஆர்.தீனதயாளன்
தஞ்சாவூர் மாவட்டம்,
பாபநாசம் அருகே அய்யம்பேட்டை பெரிய தைக்கால் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயில் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணி நடைபெற்று,
முடிவுற்ற நிலையில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து கணபதி ஹோமம், மகாலெட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்பட பூர்வாங்க பூஜைகள் உள்பட யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
அதனைத் தொடர்ந்து மேள, தாளங்களுடன் வேத மந்திரங்கள் முழங்க, ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தின் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை அய்யம்பேட்டை பெரிய தைக்கால் தெரு நாட்டாமைகள், தெருவாசிகள், கோயில் நிர்வாகம், திருப்பணி குழுவினர் மற்றும் அயினா கோபால்சாமி சௌராஷ்டிரா இளைஞர் சங்கத்தினர் செய்து இருந்தனர்.