தமிழகத்தில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது அதன்படி தூத்துக்குடி மாநகராட்சி பள்ளி ஆன சாமுவேல் புரத்தில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த மாணவன் மாரிச்சரண் 478 மார்க் எடுத்து பள்ளியில் முதல் மாணவனாகவும் 476 மார்க் எடுத்து தனலட்சுமி இரண்டாம் இடம் பிடித்துள்ளார்

பள்ளியில் அதிக மார்க் பெற்ற மாணவர் மாணவிகளை தலைமை ஆசிரியர் பாராட்டினார். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநகராட்சி பள்ளி மாணவி தனலட்சுமி 476 மார்க் எடுத்தது தொடர்பாக கூறுகையில் மாநகராட்சி பள்ளியில் நான் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் பள்ளியில் இரண்டாம் இடம் பிடித்துள்ளேன் பள்ளிக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் மாநகராட்சி மேயர் ஜெகன் மாநகராட்சி ஆணையர் மதுபாலன் ஆகியோர் செய்து கொடுத்துள்ளனர்

எனது படிப்புக்கு உறுதுணையாக தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் உறுதுணையாகவே இருந்தனர் வரும் கல்வி ஆண்டில் மாநில அளவில் அதிக மார்க் எடுத்து மாநகராட்சி பள்ளிக்கு பெருமை சேர்த்தேன் என்று பள்ளி மாணவி தனலட்சுமி கூறினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *