வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பூத் ஸ்லீப் வாக்காளர்களுக்கு வீடு, வீடாக விநியோகிக்கும் பணி நடைபெற்றது.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாகநடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி முதல் கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதன் பிறகு ஒவ்வொரு கட்டங்களாக பல்வேறு மாநிலங்களில் ஜூன் 1ஆம் தேதி வரை நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.

நாடு முழுவதும் நடைபெறும் வாக்குப்பதிவுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் நாலாம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் நன்னிலம் சட்டமன்றத்திற்கு உட்பட்ட வலங்கைமான் பேரூராட்சி பகுதியில், வலங்கைமான் வட்டாட்சியர் ரஷ்யா பேகம் வாக்காளர்களுக்கு பூத் சிலீப் வழங்கினார். நிகழ்ச்சியில் தேர்தல் துணை வட்டாட்சியர் ரவி மற்றும் வருவாய்த் துறையினர், அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *