மானாமரையில் அரசு அனுமதியின்றி கணவருக்காக வாக்கு சேகரிக்க சென்ற ஸ்ரீநிதி. தடுத்து நிறுத்திய தேர்தல் அதிகாரிகளுடன் திமுகவினர் வாக்குவாதம். தடையை மீறி பிரச்சாரம். திமுகவினர் மீது காவல் நிலையத்தில் புகார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற வேட்பாளராக கார்த்திக் சிதம்பரம் போட்டியிடுகிறார் அவருக்கு ஆதரவு திரட்ட அவருடைய மனைவி ஸ்ரீநிதி கார்த்திக் சிதம்பரம் மானாமதுரை காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் வார்டு வாடாக பிரச்சாரம் செய்ய கிளம்பிய போது தேர்தல் அதிகாரிகள் எங்கு பிரச்சாரம் செய்யப் போகிறீர்கள் என கூறி அனுமதி கடிதத்தை காண்பிக்க கூறியுள்ளனர். காண்பிக்காததால் இருதரப்பினடை வாக்குவாதம் ஏற்பட்டது ஸ்ரீநிதிகார்த்திக் சிதம்பரம் உடனடியாக காரில் போய் உட்கார்ந்தார். பின்னர் ஆட்டோக்கு மட்டும் பர்மிஷன் வாங்கி கடிதத்தை காண்பித்தனர் அதனை தேர்தல் அதிகாரிகள் ஏற்றுக் கொள்ளாததால் மீறி ஒவ்வொரு வாடாக சென்று தற்போது பிரச்சாரத்தை ஸ்ரீநிதி தலைமையில் திமுகவினர் மேற்கொண்டு வருகின்றனர். காரில் உட்கார்ந்த ஸ்ரீநிதி கார்த்திக்சிதம்பரத்தை வீடியோ எடுத்த செய்தியாளரை காங்கிரஸ் கட்சியினர் தகராறு ஈடுபட்டு அடிக்க சென்றனர். இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் தனியார் தொலைக்காட்சி செய்தியாளரும் மானாமதுரை காவல் நிலையத்தில் ஸ்ரீநிதி மற்றும் திமுகவினர் மீது புகார் மனு அளித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *