செங்கம் செய்தியாளர் சக்திவேல்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த நீப்பத்துறை வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்த ஆண் புள்ளிமான் நாய்கள் கடித்து உயிர் இழப்பு
கோடை காலம் என்பதால் தினம்தோறும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில்
வன விலங்குகளை பாதுகாக்க செங்கம் வனத்துறையினர் வனவிலங்குகளுக்கு வனப்பகுதியில் கூடுதலாக தண்ணீர் தொட்டிகள் அமைத்து தண்ணீர் கொடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
இதேபோன்று செங்கம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் வறட்சியின் காரணமாக வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி விவசாயநிலம் மற்றும் ஊருக்குள் வருவதால் சிலர் வேட்டையாடியும்
இதுபோன்று தெரு நாய்கள் கடித்தும் வனவிலங்குகள் உயிரிழந்து வருவது தடுக்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்