உடையார் பாளையம் அடுத்த வெண்மான் கொண்டான் சாலையில் பள்ளி குழந்தைகளை அழைத்துச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே மணகதி-வெண்மான் கொண்டான் சாலையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளிக்கு சொந்தமான பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்லும் பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த உடையார்பாளையம் போலீசார் படுகாயம் அடைந்த பள்ளி குழந்தைகளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

படுகாயம் அடைந்த ஐந்து குழந்தைகள் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

இந்த விபத்து குறித்து உடையார்பாளையம் போலீசார் வேன் ஓட்டுனரை கைது செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *