கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் வீ.முகேஷ்.
நாடாளுமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய பாமக கூட்டணி கட்சியினருக்கு நன்றி என
பாட்டாளி மக்கள் கட்சியின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் கு.ஹரிதாஸ் கூறினார்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி செயலாளர் கு.ஹரிதாஸ் (22.04.2024) அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமையில் கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் வெற்றி வேட்பாளர் நரசிம்மன் அவர்கள் வெற்றி பெற சிறப்பான முறையில் பணியாற்றிய பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகளுக்கும்,கூட்டணி கட்சியை சார்ந்த தோழர்களுக்கும், செயல் வீரர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.