நாமக்கல் மாவட்டம்.
பரமத்தி வேலூர் சுல்தான்பேட்டை ஸ்ரீ சக்தி கண்ணனூர் புதுமாரியம்மன் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை மூலவர் மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடைபெற்றது. முக்கிய வீதிகளின் வழியாக அலங்கரிக்கப்பட்ட அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது

இதில் ஏராளமான பக்த கோடி பெருமக்கள் கலந்து கொண்டு பலவகை பூக்களை தட்டுகளில் நிரப்பி மேளதாளங்கள் முழங்க மாரியம்மன் க்கு கொண்டு வந்து அம்மன் திருமேனி முழுவதும் வண்ண வண்ண தாமரை மல்லிகைப்பூ மரிக்கொழுந்து வெள்ளை சம்பங்கி, அரளி போன்ற ஏராளமான பூக்களை கொண்டு நிரப்பினர்.

சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.இறுதியில் மூலவர் அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது

பேட்டையில் எழுந்தருளியுள்ள சக்தி கண்ணனூர் புது மாரியம்மன் கோவில் திருவிழா 23-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு பூச்சாட்டுதல் மற்றும் கம்பம் நடும் விழாவுடன்  தொடங்கியது.

(வெள்ளிக்கிழமை) மாலை அம்மனுக்கு பூச்சொரிதல் விழாவும், இரவு காமதேனு வாகனத்தில் அம்மன் முக்கிய வீதிகள் வழியாக  திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

காப்பு கட்டுதல் மற்றும் பூச்சாற்றுதல் தொடங்கியதில் இருந்து தினமும் அம்மன் இரவு யானை, காமதேனு, சிங்கம், குதிரை அண்ணப்பச்சி, சர்ப்பம், போன்ற வாகனங்களில் எழுந்தருளி முக்கிய வீதிகளின் வழியாக பக்த கோடிகளுக்கு காட்சி அளித்து வேலூர் நகரம் முழுவதும் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறும்.
30-ஆம் தேதி மாலை தீமிதி விழாவும், இரவு சிங்க வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மே 1-ஆம் தேதி காலை பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற அழகு போடுதல் மற்றும் அக்கினி சட்டி எடுத்தலும், கிடா வெட்டுதல், மாலை பொங்கல் மாவிளக்கு நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பரமத்தி வேலூர், பேட்டை புது மாரியம்மன் கோவில் விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *