அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி.கே.பழனிச்சாமி அவர்களின் ஆணையின்படி நீர் மோர் பந்தல் திறப்பு விழா

திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக சார்பில் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாண்டியன் நகரில் திருப்பூர் வடக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் தலைமையில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா

இன்று நடைபெற்றது. இந்த நீர்மோர் பந்தலை முன்னாள் துணை சபாநாயகரும் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினரும் திருப்பூர் மாநகர மாவட்ட செயலாளர் ஆன பொள்ளாச்சி.வி.ஜெயராமன் பங்கேற்று ரிப்பன் வெட்டி நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி, இளநீர், வெள்ளரி உள்ளிட்டவைகளை வழங்கினார். இதைத்தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியவர்,கடந்த மூன்று ஆண்டு கால திமுக ஆட்சியில் தமிழகம் கஞ்சா, அபின் போன்றவற்றால் போதை சாம்ராஜ்யமாக மாறி உள்ளது,

கடந்த 10 நாட்களாக கொலை, கொள்ளை குற்ற சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ளது, இதற்கு பாடம் புகட்டும் வகையில் வரும் ஜூன் 4-ம் தேதி அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் எடப்பாடியார் வெற்றி பெறுவார், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மால்ட் பீர் டாஸ்மாக்கில் விற்பனை குறித்து கேட்டதற்கு,விதவிதமான போதை பொருளை அறிமுகப்படுத்துவது தான் திராவிட மாடல் ஸ்டாலின் ஆட்சியின் தத்துவம் என்றும், ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று சொன்னது போலித்தனமான போராட்டம், சாராய ஆலைகளில் திமுக வேட்பாளர்கள் உரிமையாளர்களாக உள்ளன, ஸ்டாலின் குடும்பம் பங்குதாரர்களாக உள்ளனர் இன்று முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி.வி.ஜெயராமன் பேட்டி அளித்தார். இந்த நிகழ்வில் திருப்பூர் மாநகர மாவட்ட துணைச் செயலாளர் பூலுவபட்டி பாலு, பகுதி கழகச் செயலாளர் பட்டுலிங்கம் உட்பட அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் என பல பங்கேற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *