காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் பார் அசோசியேசன் சார்பில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் வகையில் தேர்தல் நடைபெற்றது. இதில் காலை முதல் ஏராளமான வழக்கறிஞர்கள் ஆர்வத்துடன் வாக்களிகளித்தனர்.மொத்தம் 442 வாக்காளர்களில் 417 வாக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் தலைவராக கண்ணன் 253 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

செயலாளராக உமாசங்கரி 221 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். துணைத்தலைவராக சுதாகர் 249 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் பொருளாளராக கமலக்கண்ணன் துணைச் செயலாளராக நரேஷ் பாரதி நூலகராக சிவா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதில் தேர்தல் அலுவலர்களாக வழக்கறிஞர் ஜெனகன். ஜெயவேல். மூர்த்தி. லோகநாயகி. சோனியா. லோகநாதன். பிரதீப். ஆகியோர் சிறப்பாக பணிபுரிந்தனர். இதனைத் தொடர்ந்து சக வழக்கறிஞர்கள் வெற்றி பெற்ற வழக்கறிஞர்களுக்கு மலர் மலைகள் மற்றும் கதர் ஆடைகள் அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தொடர்ந்து தேர்தல் அலுவலர்களை மரியாதை நிமித்தமாக கதர் ஆடைகள் அணிவித்து வெற்றி பெற்ற நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர் அசோசியேசன் துவங்கிய நாளிலிருந்து முதல் முதலாக செயலாளராக பெண் வழக்கறிஞர் உமாசங்கரி முதன்முதலாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *