வேதாரண்யம் செய்தியாளர் மருதூர் மணி..
தமிழ்நாடு மாநில அளவில் தஞ்சையில்
ஒன்று கூடி நடைபெற்ற நம்மாழ்வார்
திருவிழாவில் நமது நாகப்பட்டினம் மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்கும் வகையில் வேதாரண்யம் வட்டத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக விவசாயிகள் நலன் மற்றும் உரிமைகள்,ஊரகவளர்ச்சி,தகவலறியும் உரிமைச் சட்டம்,
அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் முழுமையாக கொண்டு சேர்த்தல்,லஞ்சம் ஊழல் தடுப்பு பணிகள்,எதிர்கால மாவட்ட வளர்ச்சி திட்டமிடல் என மக்கள் நலன் சார்ந்த சமூக பணிகளில் சிறப்பாக செயற்பட்டு வருவதற்காக இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் மக்கள் இயக்கம் விருது திருமிகு.அகிலன் தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு நம்மாழ்வார் மக்கள் இயக்கம் சார்பாக 2023-24ஆண்டுக்கான விருது வழங்கப்பட்டது
இவர் கடந்த ஆண்டு கோடை மழையால் பாதிக்கப்பட்ட எள்,நிலக்கடலை சாகுபடிக்கான நிவாரண தொகையை தேர்தல் காலத்தில் கூட ஏப்ரல் முதல் வாரத்தில் விவசாயிகள் வங்கிக் கணக்குகளில் பெற்று தந்தவர் எனவும்தற்போதும் விவசாய பயிர் சாகுபடி குறித்த தெளிவான வருவாய்த்துறை ஆவண பதிவேடு மற்றும்,வேதாரண்யம் முல்லைப்பூ புவிசார் குறியீடு மற்றும் நேரடி சந்தை, பாசனங்கள் மீட்பு, வெங்காய தாமரை ஆதிக்கம்..
குறித்த விடயங்களுக்கு தெளிவான மற்றும் நிரந்தர தீர்வு காணுதல்.. என்ற நோக்கோடு.. தொடர்ந்து களம் காணும் ஆற்றல்மிகு இளைஞரான திரு.அகிலன் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக .. மருதூர் வடக்கு கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்..