தமிழ்நாடு பார்க்கவ குல சங்கம் மற்றும் இளைஞர் அணி சார்பாக பெரம்பலூரில் நடைபெற்ற கல்யாண மாலை நிகழ்ச்சி:
பெரம்பலூர் துறையூர் சாலையில் அமைந்துள்ள தனியார் கூட்டரங்கில் ஏப்ரல்- 28 ஆம் தேதியான நேற்று காலை நடைபெற்ற இந்நிகழ்ச்சி தமிழ்நாடு பார்க்கவகுல சங்க திருச்சி மண்டல தலைவர் டாக்டர் தங்கராஜ் தலைமையிலும்,மாவட்ட தலைவர் K. ஜெயராம் மாவட்டச் செயலாளர் K. M. P சண்முகம் மாவட்ட பொருளாளர்: C. ரெங்கசாமி…
ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு பார்க்கவ குல சங்கத்தின் நிறுவனர் மா.ரா.குமாரசாமியின் பேரன் மா. ரா. தணிக்கை கலைமணி, மாநிலச் செயலாளர் P.C.செங்குட்டுவன்,
முன்னாள் குன்னம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஆர் டி ராமச்சந்திரன், தமிழ்நாடு பார்க்கவன் தொழிற்சாலை கூட்டமைப்பகூட்டமைப்பின் தலைவர் ரெசார்ட் செந்தில் மற்றும் மாநில & மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த கல்யாண மாலை நிகழ்ச்சியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வரன்களின் ஜாதகங்கள் பதிவு செய்யப்பட்டு பரிமாறிக் கொள்ளப்பட்டன. நிகழ்ச்சியின் முன்னேற்பாட்டாளர்களாக
பெரம்பலூர் மாவட்ட இளைஞரணி தலைவர் மதுரா D.ரவி மற்றும் மாவட்ட இளைஞரணி நிர்வாகிகளான
A.முரளி,ஸ்டாலின்,தெய்வீகன்,ர.தினேஷ்பாபு ,S. வேல்முருகன், A.ஆனந்த் S.கார்த்தி. P. சதீஷ், E. கண்ணன் P. வினோத் குமார்,R. மனோபாரதி, G.V. விஜயராஜ்,G. யோகேஸ்வரன், R. அரவிந்த், S.அருண்,R.T.R. கோகுல் மற்றும் நிர்வாகிகள் பலர் செயல்பட்டனர்.