தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கள்ளிக்குடி வட்டாரக்கிளையின் சார்பில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர் களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா வட்டாரத்தலைவர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்டத் துணை செயலாளர் வாசுதேவன் மற்றும் வட்டாரப்பொருளாளர் முருகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வைத்தனர். வட்டாரச் செயலாளர் சுதந்திர பாண்டியன் வரவேற்று, விழாவினை ஒருங்கிணைத்தார். மாநில பொதுச் செயலாளர் மயில், மாநிலச்செயலாளர் முருகன், மாவட்டச்செயலாளர் சீனிவாசன், மாவட்டப்பொருளாளர் எமிமாள் ஞான செல்வி, மாநில செயற்குழு உறுப்பினர் முருகேசன், கல்வி மாவட்ட நிர்வாகிகள் ஞானசேகரன், தனபாக்கியம் மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினர் அருள்தாஸ் ஆகியோர் பணி நிறைவு பெற்ற கனகராஜ் மற்றும் லீலா ஆகியோருக்கு நினைவுப்பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினார்.
விழாவில் பக்கத்து வட்டார நிர்வாகிகளான பரணி பாபு, ஜோசப் ஜெயசீலன், வைரமணி, ராமர், ஆதி முருகன், அவ்வையார், பெரியகருப்பன், குமார், நாராயணன், ராஜலட்சுமி, பேச்சியம்மாள், ராமமூர்த்தி, பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். கள்ளிக்குடி வட்டாரக்கிளையில் இருந்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் இயக்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விழா இறுதியில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் வைரபாண்டி நன்றி கூறினார்.