செங்குன்றம் செய்தியாளர்
மாதவரம் ,;பால்பண்ணை அடுத்த மாத்தூரில் குடிபோதையில் வந்த இளைஞர்கள் ஆட்டோ மற்றும் வீடுகளில் உள்ள ஜன்னல் கண்ணாடிகளை கத்தியால் அடித்து உடைத்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாத்தூர் எம் எம் டி ஏ மூன்றாவது தெருவில் இன்று அதிகாலை 2 மணியளவில் ஐந்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கஞ்சா மற்றும் குடிபோதையில் சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பத்துக்கும் மேற்பட்ட ஆட்டோவின் முன்பக்க கண்ணாடி மற்றும் பின்பக்க கண்ணாடிகளை உடைத்தும் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை கத்தி மற்றும் அரிவாளாளால் அடித்து உடைத்தும் சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடியுள்ளனர் .
அதிகாலை நேரம் என்பதால் வீட்டில் உள்ளவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சமயம் நடந்த இந்த சம்பவத்தில் இருந்த மர்ம நபர்கள் பற்றி தெரியவில்லை. உடனே இது தகவல் மாதவரம் பால் பண்ணை காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்தப்பட்டது.
தகவல் அறிந்த மாதவரம் பால் பண்ணை இன்ஸ்பெக்டர் வேலுமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு ரகளையில் ஈடுபட்ட நபர்களை அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை வைத்து சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர் .
இச்சம்பவம் குறித்து பால்பண்ணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அதிர்ச்சியில் உள்ளனர்.