கிணற்றில் ஆண் சடலம் கண்டெடுப்பு பாடாலூர் போலீஸார் தீவிர விசாரணை :

ஏப்ரல் : 29, :பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவிற்குட்பட்ட து. களத்தூர் கிராமத்தில் கிணற்றில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக பாடாலூர் போலீஸாருக்கு ஏப்ரல் 29- ஆம் தேதியான இன்று காலை – 9 மணியளவில் பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர் இதனையடுத்து தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சடலத்தை மீட்டபோது இறந்தவர் அதே கிராமத்தைச் சேர்ந்த அங்கமுத்துவின் மகன் மதியழகன் வயது -45 என்று அடையாளம் காணப்பட்டது.

சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் மற்றும் உடல் ஊனமுற்றவர் என்பதும் முதல் தகவல் அறிக்கையில் தெரியவந்துள்ளது.கிணற்றில் குளிக்க வந்தபோது தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகின்றது. இதுகுறித்து பாடாலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இறந்தவரின் உடலானது பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *