காஞ்சிபுரத்தில் கடந்த சில தினங்களாகவே 100 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவாகி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கோடையும் களத்தில் பொதுமக்கள் தண்ணீர் அருந்தி பயன்பெற அனைத்து மக்கள் கூடும் இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்க அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்த நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் தண்ணீர் பந்தல் திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட வருகின்றனர்,

இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த கலக்காட்டூர் பகுதியில் அதிமுக ஒன்றிய செயலாளர்கள் களக்காட்டூர் ராஜு தலைமையில் ரோஸ் மில்க், பழ சாறு, தர்பூசணி, கீரைக்காய், குளிர்பானங்கள் என கோடைகாலத்தில் மக்கள் பயன்பெற பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தனர்.

தண்ணீர் பந்தலை முன்னாள் அமைச்சர் வளர்மதி மற்றும் சோமசுந்தரம் ஆகியோர் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து மக்களுக்கு பழ வகைகள் வழங்கினர், துவக்கி பின் சிறிது நேரத்திலேயே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒருவருக்கு ஒருவரும் முண்டியடித்துக் கொண்டு பழ வகைகள், குளிர்பானங்களை அள்ளிக்கொண்டு சென்று காலி செய்தனர்.

நிகழ்ச்சிக்கு முன்பு களக்காட்டூர் சுற்றியுள்ள பகுதியில் உள்ள பாமக கட்சியை சேர்ந்த இளைஞர்கள் 50-க்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் வளர்மதி முன்னிலையில் அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *