இன்ஸ்டா மூலம் காதல் திருமணத்திற்கு மறுத்த காதலி மீது மண்எண்ணை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி ஓடிய வாலிபர் அதிரடி கைது

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் முத்துக்கொத்தனார் தெருவை சேர்ந்தவர் பெருமாள்சாமி மகள் பாண்டிச்செல்வி (வயது 28).ஏற்க்கனவே பாண்டி என்பவருடன் திருமணமான இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டா கிராம் மூலம் குணசேகரன் (32) என்பவர் அறிமுகமானார். 2 பேரும் அடிக்கடி செல்போ னில் பேசி கொண்டனர். இதில் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டதாக கூறப் படுகிறது.

தனது முதல் திருமணம் குறித்த தகவலை பாண்டிச் செல்வி குணசேகரனிடம் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்க ளாக குணசேகரன் தன்னை திருமணம் செய்து கொள்ளு மாறு பாண்டிச்செல்வியிடம் அடிக்கடி கூறிவந்துள்ளார். ஆனால் அதற்கு பாண்டிச் செல்வி மறுத்தார். இதனால் அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது.

இதற்கிடையில் இன்று காலை ராஜபாளையத்தில் உள்ள பாண்டிச்செல்வி வீட்டிற்கு குணசேகரன் நேரில் வந்து திருமணம் குறித்து பேசியதாக கூறப்படுகிறது இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில்

ஆத்திரம் அடைந்த குணசேகரன் தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணை கேனை எடுத்து பாண்டிச் செல்வி மீது ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார் இதை தடுக்க வந்த அவரது சகோதரி பாண்டீஸ்வரிக்கும் லேசான
தீக்கா யம் ஏற்பட்டது.

சகோதரிகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து. தீயை அணைத்ததோடு 2 பேரையும் ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்

இதுகுறித்து தகவலறிந்த போலிசார் வழக்கு பதிவு செய்து பாண்டிச்செல்வியிடம் விசாரித்தபோது தப்பி ஓடிய மதுரை வாலிபர் குணசேகரன் பெயர் மற்றும் போன் நம்பர் மட்டுமே தனக்கு தெரியும் வேறு விபரம் எதுவும் தெரியாது என்று கூறியதை அடுத்து போலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்
இந்நிலையில் மாவட்ட எஸ்பி பரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில் இராஜபாளையம் டிஎஸ்பி அழகேசன் தலைமையிலான தனிப்படையினர் விரைந்து செயல்பட்டு சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கஞ்சிரங்குளம் பகுதியை சேர்ந்த குனசேகரன் என்பரை கைது செய்து சிறையில் அடைத்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *