மதுரையில் நாடகத் திருவிழா….

மதுரை யானை மலை கிரீன் பவுண்டேஷன் சார்பாக 160 வது வார நிகழ்வாக நாடகத் திருவிழா மற்றும் மரம் நடும் விழா ஒத்தக்கடையில் மலைச்சாமிபுரம் மாணவர் விடுதியில் நடைபெற்றது.

ஊராட்சி மன்ற தலைவர் முருகேஸ்வரி சரவணன் தலைமை வகித்தார். மாணவி முத்தழகி வரவேற்றார். ஆலோசகர் தலைமையாசிரியர் தென்னவன் முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக மதுரை ஸ்கூல் ஆஃப் டிராமா நிறுவனர் உமேஷ் கலந்து கொண்டு நாடகத்தின் சிறப்புகள் பற்றி பேசினார். யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பாக உமேஷிற்கு
‘சங்கரதாஸ் சுவாமிகள் விருது’வழங்கப்பட்டது.

சென்னை தேடல் தியேட்டர்ஸ் சார்பாக இயக்குனர் வசந்த் இயக்கிய’எப்போ வருவாரோ’என்ற குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை அளிக்கக்கூடிய நவீன நாடகம் நடத்தப்பட்டது.
மாணவர் விடுதியில் இலுப்பை மரம் நடப்பட்டது.

குழந்தை நலினா சாதனைப் பெண்கள் குறித்து பேசினார். ஆலோசகர் பிரபு தொகுத்து வழங்கினார். விழாவில் ஆலோசகர்கள் சிலம்பம் மாஸ்டர் பாண்டி, கார்த்திகேயன், மற்றும் சமூக ஆர்வலர்கள் பரமேஸ்வரன், ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் செல்வராஜ், அப்துல் கலாம் வழியில் நண்பர்கள் அமைப்பின் நிறுவனர் செந்தில், வழிகாட்டி மணிகண்டன் மாற்றம் தேடி பாலமுருகன் அசோக் குமார் சசிகுமார் ஆசிரியை சுலைகாபானு, நஜிமுதீன், செல்வம் ராமசாமி, ஆசிரியை மதிப்பிரியா, துர்கா, பாஸ்கரன், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு மரங்கள் நட்டனர். ஆலோசகர் ராகேஷ் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *