பொட்டலூரணியில் தூத்துக்குடி ஈகியர்களுக்குக் குலதெய்வ வழிபாடு தூத்துக்குடித் துப்பாக்கிச் சூட்டில் உயிர் ஈகம் செய்தவர்களுக்கு,
பொட்டலூரணியில் கழிவு மீன் நிறுவனங்களுக்கு. எதிரான போராட்டக் குழு சார்பில் குலதெய்வ வழிபாடு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், சேவல் பலியிட்டும், பொங்கலிட்டும், ஈகியர் படத்திற்கு மாலை அணிவித்தும், மெழுவர்த்தி ஏற்றியும் குலதெய்வ வழிபாடு நிகழ்ச்சியாக நடத்தினர்.
ஸ்டெர்லைட் கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், பொட்டலூரணியைச் சுற்றியுள்ள கழிவு மீன் நிறுவனங்களை மூடக் கோரியும், பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறக்கோரியும் முழக்கமிட்டனர்.