செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட அகிலி ஊராட்சியில் ஊராட்சி செயலராக அதே பகுதியை சேர்ந்த தசரதன் (45) என்பவர் பணியாற்றி வருகிறார் அவர் தனது வயல்வெளியில் உள்ள மின் மோட்டாரில் தன்னுடைய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மின் மோட்டார் சுவிட்ச்சை ஆன் செய்த போது மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்துள்ளார்,

அப்போது அருகில் இருந்த கிராம மக்கள் அவரை மீட்டு மேல்மருவத்தூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால்
பரிசோதித்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என தெரிவித்தனர், இத்தகவல் தெரிந்து வந்த மேல்மருவத்தூர் காவல்துறையினர் உடலை மீட்டு உடல் கூறு ஆய்விற்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்துக்கு குறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஊராட்சி செயலாளர் மின்சாரம் தாக்கி பலியானது அப்பகுதி மக்களிடையே பெரும்
சோகத்தை ஏற்படுத்தியது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *