தென்காசி மாவட்டம்
மேலநீலிதநல்லூர் வட்டாரத்தில் உளுந்து மற்றும் பாசிப்பயறு பயிர்கள் மழை இல்லாமையால் ஏற்பட்ட வறட்சியால் பயிர் சேதம் அடைந்த விபரங்களை தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் கனகம்மாள்
ஆய்வு செய்யும் பணிகளை மேற்கொண்டார்.

அதனையடுத்து
நடுவக்குறிச்சி மேஜர் நடுவக்குறிச்சி மைனர் ஆகிய வருவாய் கிராமங்களில் கிராம நிர்வாக அதிகாரிகள் அலுவலகங்களில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் விபரங்களை விரைந்து சேகரித்து உரிய படிவங்களில் பூர்த்தி செய்து அனுப்பிட கேட்டுக்கொண்டார்.
அப்போது நடுவக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் முத்துப்பாண்டியன் அட்மா திட்ட முன்னாள் தலைவர் வெள்ளத்துரை ஆகியோர் நெல் அறுவடை ஆரம்பிக்க இருப்பதால் தமிழ்நாடு நுகர்பொருள் கழக நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்றும் வறட்சி பாதிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் வறட்சி நிவாரண தொகையை உடனடியாக வழங்கவும், ஏற்கனவே வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்கள் காப்பீடு செய்யப்பட்டு உள்ளன , அதன்படி காப்பீட்டு தொகை விரைந்து வழங்கவும் வேண்டும் என கேட்டுக் கொண்டார்கள்.
இது தொடர்பாக அரசு விதி முறைகள் படி வழங்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மூலமாக தகவல்களை அனுப்பப்படும் என்றும் நேர்முக உதவியாளர் கூறினார்.
பின் சேர்ந்தமரம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமம் ஆன ஈச்சந்தா , சின்னகோவிலாங்குளம் விவசாயிகளுக்கு தார்ப்பாய்கள் , வேளாண்கருவிகள் கொண்ட கிட் , ஆகியவற்றை மானிய விலையில் வழங்கினார்.
இந்த ஆய்வு பணி களின் போது மேலநீலிதநல்லூர் வட்டார துணை வேளாண்மை அலுவலர் ரவிச்சந்திரன், உடனிருந்தார்.
ஆய்வு பணி க்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர்கள் லெட்சுமணன்,சொரிமுத்து, மருதுபாண்டியர் ஆகியோர் செய்திருந்தனர்.
கிராம நிர்வாக அதிகாரிகள் பவானி , பூங்கொடி, மற்றும் நடுவக்குறிச்சி மேஜர் நடுவக்குறிச்சி மைனர் வருவாய் கிராம விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *