முயற்சி திருவினையாக்கும் ! கவிஞர் இரா .இரவி !

என்னால் முடியுமா ?என்ற எண்ணம் வேண்டாம்
என்னால் முடியும் என்றே முயன்றிடு முடியும் !

உன் லட்சியத்தின் மீது விருப்பம் வேண்டும்
உன் மீது உனக்கு தன்னம்பிக்கை வேண்டும் !

திட்டமிட்டு பயிற்சி செய்து வந்தால்
திடமான வெற்றி உறுதியாகக் கிட்டும் !

கவனத்தைக் கண்டதில் சிதற விடாமல்
கவனம் செலுத்தினால் வாகை சூடலாம் !

நேரத்தை நீ மதித்து நடந்தால்
நேரம் உன்னை மதித்து நடக்கும் !

சிந்தனை செயல் நோக்கம் மீதிருந்தால்
சிறப்பான வெற்றி தேடி வந்து சேரும் !

கேலி கிண்டலுக்கு செவிமடுக்க வேண்டாம்
கண்ணும் கருத்துமாய் நோக்கத்தைக் கொள் !

முந்தைய சாதனை வரலாறு படித்திடு
முயன்று முந்தையதை முறியிடித்திடு !

அதுக்கெல்லாம் திறமை வேண்டும் தயங்காதே
அதுக்கான திறமை உன்னிடம் உள்ளது !

உன்னை நீ முதலில் முழுதாக நம்பு
உன்னை நீ சந்தேகிப்பது வீண் வம்பு !

நான் சாதிக்கப் பிறந்தவன் என்பதை
நாளும் மனதிற்குள் சொல்லிக் கொண்டிரு !

முற்றிலும் உண்மை முயற்சி திருவினையாக்கும்
முப்பால் வடித்தவர் கூற்று பொய்க்காது !

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *