செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்துக்குட்பட்ட ஆத்தூர் ஊராட்சியில் வருகின்றதமிழர் திருநாள் தைப் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் தைப்பொங்கலுக்கு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு பரிசுபொருட்கள் வழங்கிட தமிழகஅரசால் ஆணையிடப்பட்டது.
அதன்படி ஆத்தூர் ஊராட்சியில்உள்ள 476 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கப்பணம், பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க இயக்குனர்
தேவி கோபாலகண்ணன் தலைமை தாங்கினார். ஆத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மணி முன்னிலை வகித்தார். திமுக ஒன்றிய குழு உறுப்பினர் வெளியம்பாக்கம் சிவகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். அப்போது ஏரி நீர் பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் ஆத்தூர் கோபாலகண்ணன்,இகூட்டுறவு சங்க செயலாளர் மோகன், விற்பனையாளர் ஏ.வித்தியராஜ், துணைத்தலைவர்
வேதாச்சலம் லட்சுமி,மக்கள் நல பணியாளர் நீலமேகம், உட்பட வார்டு உருப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்,