நாமக்கல்

நாமக்கல் கிழக்கு மாவட்ட 5வது கழக அமைப்பு தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர் மதிமுக அமைப்பு தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகளுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்.பி. தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்

நாமக்கல் கிழக்கு மாவட்ட மதிமுக நிர்வாகிகள் 5வது அமைப்பு உள்கட்சி தேர்தல் நடைபெற்றது நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக பணியாற்றி வந்த எஸ். சேகர் மாவட்டச் செயலாளராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட் டார்

மேலும் கிழக்கு மாவட்ட பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் வைகோ எம்.பி . ஆணைக்கிணங்க மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 5 வது அமைப்புத் தேர்தல் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நாமக்கல் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் நாமக்கல் -திருச்சி ரோட்டில் உள்ள ஸ்ரீ மஹால் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது மதிமுக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தலைமை கழக தேர்தல் ஆணையாளர்.ஆர்.ரத்னசாமி தேர்தலை நடத்தினார்.

இதில் அவை தலைவர் பொறுப்புக்கு . நா.ஜோதிபாஸ், பொருளாளர் பெ. அருணகிரி,துணைச் செயலாளர்கள் வழக்கறிஞர் ஆர். எஸ்.மகாலிங்கம் வழக்கறிஞர் சு சரவணன், ரகுபதி, ஆசியோரும் தலைமை செயற்குழு உறுப்பினர் பொறுப்புக்கு வீனஸ் பி.சசிகுமார், பொதுக்குழு உறுப்பினர்கள் பதவிக்கு இ.மணிவண்ணன், கே.செல்வராஜ், கே.ராஜலிங்கம், பி.வெங்கடாசலம், ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அறிவிக்கப்பட்ட பொறுப்புகளுக்கு போட்டியாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் அனைவரும் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலரானஆர்.ரத்தினசாமி முறைப்படி அறிவித்தார்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட மதிமுக செயலாளராக தேர்வு செய்யப்பட்டஎஸ்.சேகர் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய மாவட்ட மதிமுக நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து முன்னணி நிர்வாகிகள் தொண்டர்கள் பலரும் பாராட்டி வாழ்த்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில் . நாமக்கல் கிழக்கு மாவட்டம் மதிமுக மூத்த நிர்வாகி நல்லாசிரியர் விருது பெற்ற சுப்பையன் நீலாம்பிகை,, வெண்ணந்தூர் ஒன்றிய செயலாளர்
எஸ் சுப்பிரமணி எருமப்பட்டி ஒன்றிய செயலாளர் ஆர். சிவகுமார், மோகனூர் ஒன்றிய செயலாளர் டி .குருசாமி, சேந்தமங்கலம் ஒன்றிய அவைத் தலைவர்அ.கிருஷ்ணன். நாமக்கல் நகரக் கழக செயலாளர்வைகோ பாலு,மாநில தேர்தல் பணிக்குழு துணைச் செயலாளர் வக்கீல் பி. பழனிச்சாமி ,மாநில மகளிர் அணி துணை செயலாளர் பி.பத்மா, நாமக்கல் கிழக்கு மாவட்ட முனைவர் சி. கௌதமன், மாணவரணிஎ.ஈஸ்வரன்,மா.சத்யராஜ், நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் கே.கே.கணேசன், மேற்கு மாவட்ட பொருளாளர் பள்ளிபாளையம் நகராட்சி 6வது வார்டு கவுன்சிலர் கே.சிவம், ,மாநில தீர்மான குழு உறுப்பினர் என்.எஸ். ரங்கசாமி மாநில மாணவரணி துணை அமைப்பாளர்ஆர்.பவுன்ராஜ்.
ஒன்றிய, பேரூர் , கிளை , சார்பு அணி நிர்வாகிகள், மதிமுக முன்னணி நிர்வாகிகள் தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *