தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி சக்தி நகர் பகுதியில் உள்ள தூய நெஞ்சக் கல்லூரி வளாகத்தில் இன்று நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12 ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி தலைமையில் நடைபெற்றது.
இதற்கு சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு உயர்கல்வியை எவ்வாறு தேர்வு செய்வது அதை சரியான பாதைக்கு கொண்டு சென்று வெற்றி பெற வேண்டும், ஒவ்வொரு மாணவர்களுக்கு தங்களது பெற்றோர்களுக்கு நல்ல பெயர் வாங்கிய தரவேண்டும் அதுவே நீங்கள் அவர்களுக்கு செய்யும் மாபெரும் உதவி ஆகும் என பேசினார். இதில் திமுக ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், மோகன்ராஜ் மற்றும் மாணவர்கள் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..