திருக்கோவிலூர்
விழுப்புரம் மாவட்ட நூலக ஆணைக் குழுவின் கீழ் இயங்கும் திருக்கோவலூர் முழுநேர கிளை நூலகத்தில் கோடை பயிற்சி முகாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இம் முகாமில் ‘ கற்போம் சிலம்பம் காப்போம் தொன்மை ‘ என்ற நிகழ்ச்சி,வாசகர் வட்டத் தலைவர் சிங்கார.உதியன் தலைமையில்,நல்நூலகர் மு.அன்பழகன் முன்னிலையில் நடைபெற்றது.
பயிற்சியாளர் ராஜாமுருகன் மாணவர்களுக்கு சிலம்பம் பயிற்சி அளித்தார்.மாணவர்களுக்கு புரவலர் தானிவேல் பரிசு வழங்கிப் பேசினார்.
நிழ்ச்சியை நூலகர் தியாகராஜன், நூலகப்பணியாளர்கள் சம்பத், ச.தேவி ஆகியோர் ஒருங்கிணைத்தனர் ஐம்பது மாணவ, மாணவியர்கள் பயிற்சி பெற்றனர்.