எல் தரணி பாபு செய்தியாளர் ராசிபுரம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கவுண்டம்பாளையம் பகுதியில் இருந்து திருவள்ளுவர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு பைக்கில் கல்லூரி மாணவர் ஒருவர் பெட்ரோல் டேங்க் மீது அமர்ந்து பிரதான சாலையில் கெத்தாக ஒட்டி சென்றது தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
திருவள்ளுவர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் இரு பிரிவுகளாக கல்லூரி வகுப்புகள் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தனது பைக்கை கல்லூரிக்கு விரைவாக செல்ல வேண்டும் என்ற நோக்கில் டேங்க் மீது அமர்ந்து ஆபத்தாக ஓட்டிச் சென்றது பார்ப்பவர்களை அச்சமடைய செய்தது..
இருப்பினும் இதுபோன்ற ஆபத்தான பயணங்களை மாணவர்கள் மேற்கொள்ள கூடாது என இப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்தனர்.
மேலும் இது போன்ற நடவடிக்கைகளில் இனி ஈடுபடாத வண்ணம் பெற்றோர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் அவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என அவர்கள் எடுத்துக் கூறினர்.