இராநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .G.சந்தீஷ்.IPS., அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்றக் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு, மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும், குற்ற சம்பவங்கள் அதிகம் நடைபெறும் பகுதிகளில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்துவது குறித்தும், நீதிமன்றங்களில் குற்ற வழக்குகளை விரைந்து முடிக்கும் படியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுரை வழங்கினார்கள்.
மேலும், இக்கூட்டத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *