திருப்பூர் மாவட்டத்தில் கோடை வெயில் தொடக்கத்திலேயே அதிக வெப்பம் நிலவி வருவதால் பொதுமக்கள் கவனமாக இருந்திடவும், கீழ்கண்ட தற்காப்பு வழிமுறைகளை பின்பற்றிட வேண்டும்.

மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ், தகவல் கூறினார்
வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புக்களை தடுக்க செய்ய வேண்டியவை/ வெயிலில்இருந்து தற்காத்து கொள்ளும் வழிமுறைகள்.
உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்கவும், தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.பயணத்தின் போது குடிநீரை எடுத்துச் செல்ல வேண்டும் .ஒ.ஆர்.எஸ்(ORS), எலுமிச்சை ஜூஸ், இளநீர், நீர் மோர் மற்றும் பழச்சாறுகள் பருகி நீரிழப்பைத் தவிர்க்க வேண்டும் வெளிர் நிறமுள்ள, காற்றோட்டமான ஆடைகளை அணிய வேண்டும். பருவ கால பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும். முடிந்தவரை வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நல்ல காற்றோட்டமான வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மதிய நேரத்தில் வெளியே செல்லும் போது குடை கொண்டு செல்ல வேண்டும்.

குழந்தைகளுக்கான வழிமுறைகள்

நிறுத்தப்பட்ட வாகனங்களில் குழந்தைகளை விட்டு செல்ல கூடாது. பருக இளநீர் போன்ற திரவங்களை கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கான வெப்பம் தொடர்பான நோய்களை கண்டறிய வேண்டும். குழந்தைகளின் சிறுநீரை சோதித்துப் பார்க்கவும், மஞ்சள் நிறமுள்ள சிறுநீர் நீரிழப்பை குறிக்கலாம். மழலைப் பள்ளிகளை கோடை காலம் முடியும் வரை செயல்படுத்த வேண்டாம்.

முதியவர்களுக்கான வழிமுறைகள்

தனியே வசிக்கும் முதியவர்களின் உடல் நிலையை தினமும் இருமுறை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். முதியவர்களின் அருகாமையில் தொலைபேசி உள்ளதா 6T601 உறுதிப்படுத்திக்கொள்ளவும். வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றினால், அவர்களின் வெப்பத்தை தணிக்க ஈரமான துண்டுகளால் கழுத்து மற்றும் கைகளில் வைக்கவும் மற்றும் குளிர்ந்த நீரில் குளிக்க வைக்க வேண்டும். போதிய இடைவேளையில் நீர் அருந்துவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். 100 நாள் பணியின் போது நண்பகல் 12.00
மணிக்கு மேல் பணி செய்யாமல் இருப்பது போன்றவையும் ஆகும்.

கால்நடைகளுக்கான வழிமுறைகள்

கால்நடைகளை நிழல் தரும் கூரை அடியில் கட்டவும், போதிய வசதி செய்து கொடுக்கவும். அவசியமாக போதுமான அளவு தண்ணீர் கொடுக்க வேண்டும். கால்நடைகளுக்கு தீவனங்களை வெட்ட வெளியில் போடவேண்டாம். அடைக்கப்பட்ட இடத்தில் கால்நடைகளை கட்ட வேண்டாம். பறவைகளுக்கு போதுமான நிழற்கூரைகள் அமைத்து போதுமான நீர் கொடுக்க வேண்டும். செல்லப்பிராணிகளை வெயில் காலங்களில் வாகனங்களில் தனியே விட்டு செல்லக் கூடாது.
மேலும் பருவநிலை மாற்றங்களினால் இந்த ஆண்டு கோடை வெயில் துவக்கத்திலேயே வெப்பம் அதிகமாக உள்ளதால் மாடி வீடுகளிலும், கூரை வீடுகளிலும் உள்ள மின் ஒயர்கள் உருகி மின்கசிவு ஏற்பட்டு அதனால் ஏற்படும் தீப்பொறியினால் கூரை வீடுகள் எளிதில் தீப்பிடிக்க வாய்ப்புள்ளது. மேலும் மாடி வீடுகளில் மேல் கூரையில் ஏற்படும் அதிக வெப்பத்தினால் வீட்டின் உள்ளே மேற்புறம் உள்ள இரும்பு சூடாகி மின்விசிறி, டியூப்லைட் போன்றவை கழன்று கீழே விழும் தன்மையை பெறுகின்றன. எனவே கோடை முடியும் வரை மக்கள் எச்சரிக்கையாக இருப்பதுடன் விலை உயர்ந்த பொருட்கள், நில ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் திருக்குமார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *