பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், திருப்பூர் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளருமான ஏ.பி முருகானந்தம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
பாரதிய ஜனதா கட்சிக்கு முதல் வெற்றி குஜராத்தில் தொடங்கியுள்ளது. சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தலில் 400 இடங்களுக்கு அதிகமாகவே பாஜக கைப்பற்றும்.
தமிழகத்தில் பாஜக தலைவர்கள் முதல் பிரதமர் மோடி தொடங்கி அண்ணாமலை வரை அனைவரின் சுற்றுப்பயணம் தமிழகத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது 39 தொகுதிகளும் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசியல் புரட்சியை பாஜக மேற்கொண்டுள்ளது.
ஜூன் 4 தேதி வாக்கு எண்ணிக்கை முடிவில் இதுதெரியும்.
மத்திய பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளில் செய்த சாதனைகள் சொல்லி கட்டமாக நடந்து வரும் தேர்தலில் வாக்குகளை சேகரிக்கிறோம்.
தூய்மையான குடிநீர், கியாஸ் இணைப்பு போன்ற எண்ணற்ற திட்டங்களை மக்களிடம் சொல்லி ஏழு கட்ட தேர்தலை சந்திக்கிறோம்.
தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் எந்த வேலையையும் செய்யவில்லை வாக்காளர்கள் தமிழக முழுவதும் விடுபட்டுள்ளார்கள்.இது எங்களுக்கு மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது பாஜக வாக்கு வங்கி உள்ள பகுதிகளில் இது நடந்திருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது. இது ஆளுங்கட்சி தலையீடாக கூட இருக்கலாம்.
ராகுல் காந்தி பிரியங்கா ஆகியோர் கோவிலுக்கு செல்வது தேர்தல் காலத்தில் மட்டும்தான் இந்தியா கூட்டணி என்பது ஒன்றுமில்லாத ஒன்று. இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட தலைவர் செந்தில்வேல் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.