மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் செல்லத்துரை தலைமை தாங்கினார்.

நாரணபுரம் ஊராட்சி தலைவர் செல்வி மணிமாறன் முன்னிலை வகித்தார் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பாசறை அமைப்பாளர் ஆலடி எழில்வாணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

ஒடிசா ரயில் விபத்தில் இறந்தோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாளை யொட்டி நாரணபுரம் அங்கன் வாடி மையத்திற்கு இரண்டு மின் விசிறி வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் சமுத்திரபாண்டி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் அஜய் குமார், மாவட்ட பிரதிநிதி வாசு, மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் சரஸ்வதி பாஸ்கரன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ராஜா, மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் கணேசன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் முத்துப்பாண்டி, ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணவேணி மகேந்திரன், கிளை செயலாளர் செல்லப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *