சேலம் மாவட்ட கல்வி அலுவலர் முனைவர் மு. ஆ. உதயகுமார் பணி நிறைவு பாராட்டு விழா, நாமக்கல் கிரீன் பார்க் இயக்குனர் முனைவர் எஸ் .குருவாயூரப்பன் எழுதிய உழவராப் பணியில் உள்ளம் கவர்ந்த கோவில்கள் நூல் வெளியீட்டு விழா,
நாமக்கல்லில் உள்ள
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் அனைத்து வித்தியாலயா முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பாக தமிழ்நாடு அரசு இந்து அறநிலையத்துறை திருக்கோயில்களில் உழவராப் பணி துவக்க விழா, ஆகிய முப்பெரும் விழா நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் ஆண்டகலூர் கேட் அருகே அமைந்துள்ள அருள்மிகு காசி விநாயகர் திருக்கோவில் தியான மண்டபத்தில் நாமக்கல்லில் இயங்கி வரும் கோவை ஸ்ரீ இராமகிருஷ்ணா மிஷன் அனைத்து வித்தியாலயா முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பாக நடைபெற்றது
நிகழ்ச்சிக்கு தங்கம் அசோசியேட்ஸ் மற்றும் அவ்வா துணைத் தலைவர் பொறியாளர் என். மாணிக்கம் தலைமையில் நடைபெற்ற இந்த முப்பெரும் விழாவில் பசுமை மா .தில்லை சிவக்குமார் வரவேற்று பேசினார்
பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே .ஆர் .என் ராஜேஷ் குமார் பாராட்டு மலரை வெளியிட்டு பேசினார் தமிழ்நாடு அரசு வனத்துறை அமைச்சர் டாக்டர் மா. மதிவேந்தன் வாழ்த்துரை வழங்கினார்
நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ .கே.பி சின்ராஜ் வாழ்த்துரை வழங்கினார் சேலம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமம் செயலாளர் சுவாமி யதாத்மானந்தர், கோவை பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கல்வி நிறுவனங்கள் பொருளாளர் சுவாமி சகானந்த மகராஜ் ஆகியோரும் அருளாசி வழங்கினர்
மேலும் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பி. ராமலிங்கம், சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் கே. பொன்னுசாமி ஆகியோரும் வாழ்த்தி பேசினார்கள்
மேலும் ஏராளமான முன்னாள் மாணவர்கள் மற்றும் நண்பர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள்