திருப்பத்தூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா. முன்னாள் தமிழக அமைச்சர் வீரமணி பங்கேற்பு.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி காந்திபேட்டை, ரயில்வே ஸ்டேஷன் ரோடு, புதுப்பேட்டை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா வெள்ளிக்கிழமை திருப்பத்தூர் நகர அதிமுக செயலாளர் டி.டி. குமார் தலைமையில் நடைபெற்றது. இதற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக முன்னாள் அமைச்சர் வீரமணி கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

பின்னர் பொதுமக்களுக்கு நீர்மோர், பழங்கள், குளிர்பானங்களை வழங்கினார். இதில் முன்னாள் எம்எல்ஏ கே.ஜி. ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன், ரமேஷ், டாக்டர் திருப்பதி, மாவட்ட இளைஞரணி செயலாளர் தம்பா கிருஷ்ணன், முன்னாள் ஒன்றிய சேர்மன் முருகன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ரமேஷ், துணை செயலாளர் வக்கீல் தமிழ்செல்வன் மற்றும் அதிமுகவின் இன்னாள் முன்னாள் நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *