ஏலகிரி மலையில் குடிநீர் பற்றாக்குறை. டிராக்டர் மூலம் குடிநீர் வினியோகம் செய்யும் ஊராட்சி மன்ற தலைவர்.

திருப்பத்தூர்

தமிழ்நாட்டில் ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலை மிக பெரிய சுற்றுலா தலமாக விளங்குகிறது. இந்த ஏலகிரி மலை ஊராட்சியில் 14 குக் கிராமங்களை உள்ளடங்கிய ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. சுமார் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது கோடை கால துவங்கிய நிலையில் ஏலகிரி மலையில் உள்ள திறந்த வெளிகிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகள் வரட்சியின் காரணமாக வறண்டு உள்ளது. இதனால் குடிநீருக்காக மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் குடிநீர் பிரச்சினையை தீர்வு காணும் ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன் நாள்தோறும் டிராக்டர் மூலம் 14 கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்து வருகிறார்.‌ ஊராட்சி மன்ற தலைவரின் இந்த செயலை ஏலகிரி மலையில் உள்ள மக்கள் தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *