கோவில்பட்டியில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் சிறுவன் உள்பட 8 பேர் கைது

காவல்துறை உதவி ஆய்வாளர்கள் மாதவா ராஜா, செந்தில்குமார் ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர் கைது செய்தனர்

கோவில்பட்டி ராஜீவ் நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் மாரிசெல்வம். இவர் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுத்ததாக கூறி கார்த்திக் ராஜா மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடந்த 23ஆம் தேதி நள்ளிரவில் மாரிச்செல்வம் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்திய நிலையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேஷ் மற்றும் விளாத்திகுளம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் ஆகியோர் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர்கள் மாதவா ராஜா, செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்த சூழ்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக ஒரு சிறுவன் உட்பட எட்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக ஏழு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *