தூத்துக்குடி,
பிள்ளையார்நத்தம் கிராமத்தில் ரூ.7லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடத்தின் திறப்பு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், பிள்ளையார் நத்தம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.7-லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் திறந்து வைத்தார்.
விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமார், தங்கவேல் ஒன்றிய செயலாளர்கள் ராமசுப்பு சின்னமாரிமுத்து, பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி, வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன் பிள்ளையார்நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் முனீஸ்வரி துணைச் செயலாளர்கள் சுப்புராஜ், சின்ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.