திருச்செந்தூர்
நெல்லை-திருச்செந்தூர் இடையே வருகிற 15-ம் தேதி அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடக்கிறது.
நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து தென்காசி வரை 121 கிலோமீட்டர் அதிவேகத்தில் ரயில் இயக்கி சோதனை செய்யப்பட இருக்கிறது. வருகிற 9-ம் தேதி நெல்லையில் இருந்து காலை 9.20 மணிக்கு புறப்படும் அதிவேக ரயிலானது 10.15 மணிக்கு தென்காசி சென்றடையும். மறுமார்க்கத்தில் தென்காசியில் இருந்து 10.45 மணிக்கு புறப்படும் ரயில் மதியம் 12 மணிக்கு நெல்லை வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் நெல்லை-திருச்செந்தூர் இடையே அதிவேக ரயில் சோதனை ஓட்டம் வருகிற 15-ம் தேதி நடக்கிறது. சோதனை முடிந்த பின் நெல்லையில் இருந்து மதியம் 12.05 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 8.45 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.