தென்காசி மாவட்டம்
ஆலங்குளம் குற்றவியல் நீதிதுறை நடுவர் நீதி மன்றத்தில்
வட்ட சட்ட பணி குழு,ஐஸ்வர்யா கண் பரிசோதனை மையம்,
சில்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட்இணைந்து நடத்தும்
மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைப் பெற்றது.
ஆலங்குளம் குற்றவியல் நீதித்துறை நடுவர்ஆனந்தவள்ளி சிறப்பு அழைப்பாரக கலந்து தலைமை ஏற்று மாபெரும் சிறப்பு முகாமினை தொடங்கி வைத்து கண் பரிசோதனை முக்கித்துவம் பற்றி பேசினார்
அரசு வழக்கறிஞர் ஆலடிமானா (எ) வைத்தியலிங்கம்,
வழகறிஞர்கள் சங்க செயலாளர் எஸ்பிடி நெல்சன், பொருளாளர் ஆரோக்கியசாமி, துணை செயலாளர் காபிரியேல், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கண் பரிசோதகர்கங்கா வரவேற்புரை யாற்றினார்.இம்முகமில் கிட்டப்பார்வை, தூர பார்வை, வண்ண குறைபாடு, இரத்த அழுத்தம், எடை,போன்ற பரிசோதனைகள் நடைப்பெற்றது.முகாமில் வழக்கறிஞர்கள் சாந்தகுமார்,யோகேஷ், ராம்குமார், சரவணன், சந்திரபோஸ்,எஸ் எஸ் என் சொக்கலிங்கம், சேர்மராஜ், செண்பகா, உஷா, இசக்கியம்மாள் ,தன்னார்வலர்சேர்மக்கனி,
ஐஸ்வர்யா கண் பரிசோதனை பணியாளர்கள், கவிதா, ராமலெட்சுமி, உமாமகேஸ்வரி, சுமா, மற்றும் நீதிமன்ற ஊழியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.