தர்மபுரி அடுத்த இலக்கியம்பட்டியில், சேலம் – தர்மபுரி சாலையோரம் இலக்கியம்பட்டி ஏரி உள்ளது. இந்த ஏரி பராமரிப்பின்றி, புதர் மண்டி காணப்பட்டது.
இதையடுத்து, இந்த ஏரியை, தர்மபுரி மக்கள் மன்றத்தை சேர்ந்த இளைஞர்கள், பொதுமக்கள் உதவியுடன் தூர் வாரினர். மேலும், புதர்களை அகற்றி, ஏரி கரையை பலப்படுத்தி, நடை பாதை மேடை அமைத்தனர்.
மேலும், ஏரியில் செயற்கை தீவு அமைத்து, மரக்கன்றுகளை நடவு செய்தனர். ஏரிக்கரையில், அரசு, வேம்பு, நாவல், புங்கம் உட்பட பல்வேறு வகையான மரக்கன்றுகளை நடவு செய்து பராமரித்து வந்தனர். ஆனால், தற்போது இந்த ஏரி போதிய பராமரிப்பின்றி உள்ளதால், ஏரியில் முள்செடிகள் ஆக்கிரமிப்பு அதிகரிக்க துவங்கியுள்ளது.
இதனால், ஏரிக்கரையில் வாக்கிங் சென்ற பொதுமக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. மேலும், இலக்கியம்பட்டி மற்றும் செந்தில்நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் சாக்கடை நீர், ஏரியில் நேரடியாக கலந்து வருகிறது. இதனால், ஏரியில் தேங்கும் மழை நீர் மாசடைந்து வருவதுடன், துர்நாற்றம் வீசி வருகிறது.
மேலும், கொசு உற்பத்தி அதிகரித்து ஏரியில் அருகில் உள்ள குடியிருப்புகளில் வசித்து வரும் பொதுமக்களுக்கு தொற்று நோயை பரப்பி வருகிறது. இதை தடுக்க, இலக்கியம்பட்டி ஏரி அருகே கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைத்து, கழிவு நீரை சுத்திகரித்து, ஏரிக்கு கொண்டு வரவும், ஏரியை தொடர்ந்து பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
இந்த ஏரியை சுற்றி முக்கிய அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகள் உள்ளனர் ஏரி துர்நாற்றம் வீசுவதால் அந்தப் பகுதியில் சொல்லும் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் யாரும் கண்டு கொள்ளாதால் பொதுமக்கள் மிகுந்த வேதனை அடைந்தனர்