கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் எழுத்துப்பூர்வ மனுவை வருகிற 10-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை, நெல்லை மாவட்டம் அம்பை காவல் உட்கோட்ட பகுதியில் உள்ள போலீஸ் நிலைய எல்லை பகுதிகளில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை, அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய பல்வீர்சிங் என்பவர், பற்களை கொடூரமாக பிடுங்கியதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே, இந்த புகார் தொடர்பான விசாரணை அதிகாரியாக சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம் நியமிக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகிறார். இந்த நிலையில், பல்லை பிடுங்கியதாக ஏ.எஸ்.பி சித்ரவதை என்ற புகார் தொடர்பாக சென்னையில் உள்ள மனித உரிமை ஆணையத்தில் 5 பேர் இன்று ஆஜராகியுள்ளனர். பாதிக்கப்பட்ட 5 பேரிடம் மனித உரிமை ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். செல்லப்பா, இசக்கிமுத்து, சுபாஷ், வேதநாராயணன் உள்பட 5 பேரிடம் தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து மனித உரிமை ஆணையம் வாக்குமூலம் பெற்று வருகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *