சுரண்டை தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள பரங்குன்றாபுரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் 52-வது பிறந்த நாள் விழா நடைபெற்றது.
விழாவிற்கு தமிழக வெற்றி கழக மூத்த நிர்வாகி பரன்குன்றாபுரம் என் டி எஸ் சார்லஸ் தலைமை தாங்கி கடந்த 2025- 2026 ம் ஆண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசு மற்றும் ஊக்கத்தொகைகள் டி டி டி ஏ நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் இனிப்புகள் 520 பேர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வாழ்த்தி பேசினார்
நிகழ்வில் தவெக ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் எம்பிவி கதிர்வேல், துணை செயலாளர் சுரேஷ், இணை செயலாளர் லூர்துசாமி, உதயகுமார், ரேக்லேண்ட் , ஒன்றிய துணை செயலாளர், ஆரோக்கிய லிவின்யா, கிளை நிர்வாகிகள் பொன்ராஜ் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்