சென்னை கொடுங்கையூரில் உள்ள 34 வது வட்டம் காமராஜ் தெருவில் வடசென்னை பாரதிய ஜனதா கட்சி சார்பில் பெரம்பூர் தொகுதி மண்டல் நிர்வாகி வெங்கடேசன் தலைமையில், பெரம்பூர் தொகுதி கிழக்கு மண்டல் தலைவர் எம் சண்முகம் முன்னிலையில் மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இந்த சிறப்பு முகாமில் உறுப்பினர் சேர்க்கை, 5 லட்சம் மதிப்புள்ள மருத்துவ காப்பீடு, செல்வமகள் சேமிப்பு திட்டம் ,தொழிலாளர் நல வாரிய அட்டை, தொழிலாளர் – வணிகர் ஓய்வூதிய திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பெரம்பூர் தொகுதி கிழக்கு மண்டல் செயலாளர் ஆர். செல்வகுமார், பெரம்பூர் தொகுதி மத்திய மண்டல் பொதுச் செயலாளர் சங்கர் மற்றும் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மத்திய அரசின் திட்டங்களை வழங்கினார்கள் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *