டி. மகேஷ் செய்தியாளர் திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட மான்கானூர் கிராமத்தில் வசிப்பவர் சுப்பிரமணி இவரது மனைவி ஈஸ்வரி இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு சுப்ரமணியின் மனைவி ஈஸ்வரி இயற்கை மரணம் அடைந்ததை தொடர்ந்து மிகுந்த வேதனைக்கு உள்ளான சுப்பிரமணி கடந்த 35 வருடங்களாக தன்னோடு வாழ்ந்த மனைவிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற உந்துதலில் தன்னுடைய 15 சென்ட் நிலத்தில் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆறடி சிலை அமைத்து கோயில் கட்டியுள்ளார்.
இதனை தொடர்ந்து முதலாம் ஆண்டு நினைவு தினமான இன்று சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஆயிரம் பேருக்கு அன்னதானமும் 500 பெண்களுக்கு புடவைகளும் வழங்கி தன்னுடைய மனைவிக்கு மரியாதை செய்துள்ளார்.
இந்த நிகழ்ச்சிக்கு வந்த ஏராளமான பெண்கள் மனைவி இறந்தாலும் அவருக்கு மரியாதை செய்கிற உத்தம புருஷனாகவே சுப்பிரமணி இருப்பதாக முணுமுழுத்துச் சென்றனர்.
மேலும் இது குறித்து ஈஸ்வரியின் கணவர் சுப்பிரமணி கூறுகையில் ஒவ்வொரு ஆண்டும் இதேபோன்று ஏழை எளிய மக்களுக்கு என்னுடைய மனைவியின் நினைவாக என்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்வேன் என்றும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.