பா. சீனிவாசன், செய்தியாளர்:வந்தவாசி.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பஜனை கோவில் தெருவில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சீதா சமேத ஸ்ரீ கோதண்ட ராமர் திருக்கோயிலில் மார்கழி மாத சிறப்பு உபன்யாசம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக, பெரிய கோவில் ஸ்ரீ உ.வே. பரதன் ஸ்வாமிகள் பங்கேற்று ‘சரணாகதி சாஸ்திரம் ‘ என்ற தலைப்பில் பக்தி சொற்பொழிவு நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் வந்தவாசி சுற்றியுள்ள ஏராளமான பாகவத கோஷ்டிகள் கலந்து கொண்டு உபன்யாசத்தை கேட்டுணர்ந்தனர். மேலும் நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்கள் பாடப்பட்டது. பங்கேற்ற அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வை ஸ்ரீ ராம பஜனை மந்திர கைங்கரிய ட்ரஸ்ட் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.