சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்டேஷ்வரி சமேத மூலநாதர் திருக்கோவில் சித்திரை.1.ல் தமிழ் வருடபிறப்பை முன்னிட்டு அர்ச்சகர் செந்தில்குமரேசன் தலைமையில் திருகோவில் தெப்பத்தில், அஸ்திரதேவர் அபிஷேகம் நடந்தேறியபின்பு வருட பஞ்சாங்கம் வாசித்தனர்..பின்னர்.மாலை ரிஷசப வாகனத்தில் சுவாமி அம்பாள் புறப்பாடாகி வீதி உலா சென்றனர்.இதில் திருக்கோவில் பணியாளர்கள் மண்டப படிதாரர்கள்முத்து இருளப்பன் குடும்பத்தினர் என பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல் குருவித்துறை சித்திரரத வல்லப பெருமாள் திருக்கோவில் தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு அர்ச்சகர் பாலாஜி தலைமையில் செண்பகதாயார் சன்னதி கோவிந்த மூர்த்தி பெருமாள் சன்னதி நாராயணமூர்த்தி ஆகியோர் வருட பஞ்சாங்கம் வாசித்தனர்..பின்னர் பெருமாள் மற்றும் குருபகவான் கோவிலில்களில் மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது.இந்நிகழ்வில் திருக்கோவில் செயல் அலுவலர் பாலமுருகன் பணியாளர்கள் நாகராஜ் மணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்
இதேபோல் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் திருக்கோவில் சித்திரை மாதம் தமிழ் வருடபிறப்பையொட்டி அர்ச்சகர் சண்முகம் தலைமையில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மேலும் கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் வரிசையில் நின்று அம்மனை வழிபட்டு சென்றனர். திருவேடகம் ஏலவார்குழலி சமேத ஏடகநாதர் திருக்கோவி. ல் வி.கோவில்பட்டி மருதோதயஈஸ்வரமுடையார் கோவிலில்களில் தமிழ் வருடபிறப்பை யொட்டி மூலவர்களூக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.இதில் ஏராளமானோர் கலந்து கொண்டர்.