எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் உள்ள நடிப்பிசைப் புலவர் கே. ஆர் ராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அகலப்பார் முறையில் கரும்பு சாகுபடி செய்திருக்கும் விவசாயிகளுக்கு மேலாண்மை இயக்குனர் சதீஷ் அவர்களின் உத்திரவின்படி தலைமை கரும்பு அலுவலர் அவர்களின் ஆலோசனைப்படி கரும்பு வெட்டும் இயந்திரம் வர வைக்கப்பட்டு கரும்பானது அறுவடை செய்யப்படுகிறது .

இந்த அறுவடை இயந்திரம் மூலம் அறுவடை செய்வதன் மூலம் கரும்பினை அடியோடு வெட்டுவதால் கூடுதல் மகசூல் மற்றும் சர்க்கரை கட்டுமானம் அதிகரிக்கும், ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று ஏக்கர் வரை அறுவடை செய்யலாம் ,சோலை எரிப்பது தவிர்க்கப்படுகிறது, இயந்திரம் மூலம் அறுவடை செய்தால் வெட்டுக் கூலி மிச்சமாகும், ஆட்கள் மூலம் அறுவடை செய்தால் ஏக்கர் ஒன்றிற்கு ஏழு நாட்களும் வெட்டு கூலியும் அதிகமாகும், எனவே அனைத்து விவசாயிகளும் அறிய வாய்ப்பினை பயன்படுத்தி அகலப்பார் முறையில் குறிப்பாக நிலத்தினை நேர் வாக்கில் பார் அமைத்து வயல் நடுவில் வரப்பு, வாய்க்கால் இல்லாமல் அமைத்து நடவு செய்ய கரும்பு விவசாயிகளுக்கு ஆலையின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது,

சர்க்கரை ஆலையின் சார்பில் சீர்காழி அருகே கூத்தியம் பேட்டை கிராமத்தில் சுகுமார் என்பவரின் வயலில் கரும்பு இயந்திரம் கொண்டு கரும்பு இயந்திரம் கொண்டுஅறுவடை செய்வதற்கான பணிகள் நடைபெற்றது, இதற்கான ஏற்பாடுகளை கரும்பு அலுவலர்கள் செல்வராஜ் ,சுந்தர் சிங், முத்து ஆகியோர் செய்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *