சோழவந்தான்

மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி திமுக சார்பாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 70 வது பிறந்த நாள் முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது இப்பந்தயத்தை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் வடக்கு மாவட்ட செயலாளர் பி. மூர்த்தி தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில்.கலந்து கொண்ட பெரிய மாடு 9.ஜோடிகள் சோழவந்தானி லிரூந்து தேனூர் சேம்பர் 10.கிலோ மீட்டர் தூரம் மற்றும் சின்னமாடு 20..ஜோடிகள் சோழவந்தானிலிருந்து மேலக்கால் வைகை பாலம் வரை 6.கிலோ மீட்டர் தூரம் என. பந்தயம் நடைபெற்றது.

பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டு உரிமையாளர்களுக்கு
சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம் எல் ஏ. ரொக்கபரிசு மற்றும் கேடயங்களை வழங்கினார்
இதில் பெரிய மாடு பந்தயத்தில் முதல் பரிசாக அவனியாபுரம் எஸ் கே ஆர் மோகன் சாமி குமார் இரண்டாவதாக இரண்டு மாட்டு வண்டி பரிசு இரண்டு பேர்கள் ஏ புதுப்பட்டி சின்னச்சாமி அம்பலம் நினைவாக இன்ஸ்பெக்டர் சிவபாலன் வேளாங்குளம் வேலா குளம் எம் கண்ணன் நாலாவது பரிசாக புதுப்பட்டி கே ஏ அம்பாள் மற்றும் சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசாக திருவாதவூர் தன்வந்த் பிரசாத் இரண்டாவது பரிசாக சோழவந்தான் எம் எல் ஏ வெங்கடேசன் மூன்றாவது பரிசாக தஞ்சை திருமுருகன் நாலாவது பரிசு சித்திரங்குடி கோவிந்த தேவர் ஆகிய பரிசு பெற்றனர்.மேலும் வெற்றி பெற்ற மாட்டுவண்டி சாரதிகளுக்கு கொடி பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேரூர் செயலாளர் சத்தியபிரகாஷ். சேர்மன்கள் ஜெயராமன் .பால்பாண்டி ஒன்றிய செயலாளர்கள் பசும்பொன்மாறன் பால.ராஜேந்திரன். மாநில பொதுகுழ ஸ்ரீதர். ஆனையூர் மருதுபாண்டி. இளைஞர் அணி வெற்றிசெல்வம். சிபிஆர் சரவணன்.பேரூர் நிர்வாகிகள் அண்ணாதுரை கண்ணன் நாகேந்திரன். கொத்தாளம் செந்தில். தீர்த்தராமன். பெரியசாமி செல்வராணி.மற்றும்
மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக வார்டு செயலாளர்கள் மற்றும் பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர். சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *