திருவள்ளூர்
தச்சூர் பகுதியில் சென்னை சங்கர நேத்ராலயா மற்றும் மாவட்ட கவுன்சிலர் தேவி தயாளன் ஆகியோர் ஏற்பாட்டில இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது. பஞ்செட்டி ஊராட்சி இந்த ஊராட்சி உள்ள தச்சூர் கூட்டுச்சாலை பகுதியில் ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் ஸ்ரீ சத்யசாய் சமூக நல மையம் செங்குன்றம் மற்றும் சென்னை சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை திருவள்ளூர் மாவட்ட 13 வது வார்டு மாவட்ட கவுன்சிலர் தேவி தயாளன் ஆகியோர் இணைந்து இலவச பார்வை இழப்பு தடுப்பு முகாம் நடைபெற்றது.
இப் முகாமினை மாவட்ட கவுன் சிலர் தேவி தயாளன் தொடங்கி வைத்தார் இதில் கண் மருத்துவர் கள் கலந்து கொண்டு கண் பார் வை சம்பந்தமான பல்வேறு நோய் கள் சரிபார்க்கப்பட்டு சிகிச்சை அளித்து கண்ணாடிகள் வழங்க பரிந்துரை செய்யப்பட்டது.
இம் முகாமில் சுற்றியுள்ள பகுதி யைச் சேர் ந்த ஏராளமானோர் பங்கேற்று சிகிச்சை பெற்றனர் இதில் காங்கி ரஸ் கட்சியை சேர் ந்த மாநில விவசாய அணி செய லாளர் தயாளன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.