வலங்கைமான் கடைவீதி யில் இரவு, பகலாக சுற்றி திரியும் மாடுகள் நடமாட்டத்தை பேரூராட்சி நிர்வாகம் கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதி பகுதி குறுகலான, அகலம் குறைந்த சாலை யாக உள்ளது இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில் தனிநபர்களுக்கு சொந்தமான மாடுகள் கடைவீதி யில் அங்கும் இங்கும் அலைவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் அடிக்கடி இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.

கடந்த மாதம் வலங்கைமான் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஒலிபெருக்கி மூலம் தனிநபர்கள் மாடுகளை கடைவீதி உள்ளிட்ட பொது இடங்களில் மேய்ச்சலுக்கு விட்டால் ரூபாய் பத்தாயிரம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்த இருந்தனர். இதனையொட்டி சில நாட்கள் மாடுகள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கடைவீதி யில் மாடுகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

எனவே மாடுகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் முன் வரவேண்டும் என்று என
பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *