பாரதப் பிரதமர் நாட்டு மக்களுக்கு ஆற்றும் உரை 100-வது மனதின் குரல் நிகழ்ச்சி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பாரதிய ஜனதா கட்சியினரால் நிகழ்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது.இதன் தொடர்ச்சியாக விழுப்புரம்வடக்கு மாவட்டம் தீர்த்த குளம்,அய்யாசாமி வீதி பூத் எண் 77 இல் பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி சார்பில் பாரதப் பிரதமர் நரேந்திரமோடி
மக்களுக்கு ஆற்றும் உரை மனதின் குரல்100-வது தமிழில் ஒளிபரப்பு நிகழ்ச்சியிணை இளைஞர் அணியின் மாநில செயலாளர் ஸ்ரீ தினேஷ்குமார் ஏற்பாட்டில்,77-வதுபூத் கிளைத் தலைவர் சரவணன் தலைமையில், திண்டிவனம் நகரத் தலைவர் வெங்கடேச பெருமாள் மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் ஆர். ஆர் .கே. செந்தில் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அரசு தொடர்பு பிரிவு நகரத் தலைவர்மேஸ்திரி பாபு, கிளை செயலாளர்கள் லோகநாதன்,ஆனந்த், வழக்கறிஞர் அணி ஜவகர், பிரச்சார பிரிவு துணைத் தலைவர் துரைசோழன், நகரத் துணைத் தலைவர் ரஜினிகாந்த், நகர செயலாளர்கள் பாலாஜி, லதா,நிர்வாகிகள் மலர், தரணி, ஐஸ்வர்யா மற்றும் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டார்கள். 300க்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவாக பிரியாணி வழங்கப்பட்டது. இறுதியாக நகர செயலாளர் கே.பாலாஜி அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *